09 May 2013

ஹைக்கூ போல சில கிறுக்கல்.


ஓடும் போதெல்லாம் நினைவுகள் 
ஓடிவருகின்றது 
உன் பின்னே
ரயில் பயணம்!



வரும்போது ஆசையில் ஆயிரம்.
பிரியும் போது கேள்வியில்
ஆயிரம்?
 எப்படித் தொலைந்தது?
பணம்!


குடிக்கும் போது இனிதாகின்றாய்
 விடியும் போது 
வேதனைதருகின்றாய்
விஸ்கி .
//
தட்டும் போது ஒலியாகின்றாய்
தட்டியவிரலுக்கு வலியாகின்றாய்
தவில் .
//
எழுதும் போது பலகதை
எல்லாருக்கும் பிடிக்கும் 
எழுதியபின்  
எழுத்து தீர்தபின் 
வீதியில்!
எழுதுகோல்!
//

குளிரும் போது இதமான காதலி
வெயில் காலத்தில்
கைவிட்ட முன்னால் காதலி
-ஜாக்கெட்!



எடுக்கும் போது எத்தனை இன்பம்
ஏட்டுப்பதிவில் ஏற்றியபின்
ஏனோ பாரம்
புகைப்படம்!
//

எத்தனை கனவு ஒரு நேரம்
ஏன் தான் இந்த கனவு
என்று கேட்கும் இன்னொரு நிஜம்!
காதல்!

30 comments :

நெற்கொழுதாசன் said...

ஒவ் தனிமரத்தின் கிறுக்கல்கள். எப்போதும் அழகான சித்தனையின் வடிவங்களே வாழ்த்துக்கள்

தனிமரம் said...

ஒவ் தனிமரத்தின் கிறுக்கல்கள். எப்போதும் அழகான சித்தனையின் வடிவங்களே வாழ்த்துக்கள் //வாங்க் நெற்கொழுதாச்ன் ஒரு பால்க்கோப்பி குடிப்போம்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

இராஜ முகுந்தன் said...

வாழ்த்துக்கள் நண்பா

இராஜ முகுந்தன் said...

வாழ்த்துக்கள் நண்பா

Seeni said...

vaazthukkal nanpaa!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
நலமா?
அத்தனையும் அருமையான துளிப்பாக்கள்...
குறிப்பாக...

///தட்டும் போது ஒலியாகின்றாய்
தட்டியவிரலுக்கு வலியாகின்றாய்
தவில் ///

உன் வலிகளை
மறந்து
எமை மகிழ்ச்சியில்
ஆழ்த்துகிறாய்...

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இது கிறுக்கலா?அத்தனையும் தத்துவம்.

அம்பாளடியாள் said...

ஒவ்வொன்றும் சிறப்பான ஹைக்கூ வரிகள் வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடரட்டும் !...

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா ஆஹா.. கவிஞராகிவிட்ட + தோப்பாகிவிட்ட, தோப்பாகியும் பெயர் மாற்றாமல் இருக்கிற தனிமரம்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹைக்கூவில் கலக்குறீங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

//எழுதும் போது பலகதை
எல்லாருக்கும் பிடிக்கும்
எழுதியபின்
எழுத்து தீர்தபின்
வீதியில்!
எழுதுகோல்!
///

சூப்பர்.. ரொம்பப் பிடிச்சிருக்கெனக்கு. உண்மையான கற்பனை.. எழுதிக்கொடுப்பது பேனைதான், ஆனா புகழ் எழுதியவருக்கு..

Angel said...

நேசன் அனைத்துமே அருமை ..இரயில் பயண ஹைக்கூ சூப்பர்ப்

கரந்தை ஜெயக்குமார் said...

அனைத்தும் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹைக்கூ எல்லாமே அருமை.

ஜாக்கெட்,
தவில்,
பணம்,
ரயில்பயணம்,
விஸ்கி

ஆகிய ஐந்தும் மிகவும் பிடித்துள்ளன. நன்கு ரஸித்தேன்.பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் நண்பா//நன்றி முகுந்தன் வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

vaazthukkal nanpaa!!//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை... வாழ்த்துக்கள்...

9 May 2013 19:14 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
நலமா?//நாம் நலம் மகி அண்ணாச்சி!
அத்தனையும் அருமையான துளிப்பாக்கள்.!நன்றிகள்§..
குறிப்பாக...

///தட்டும் போது ஒலியாகின்றாய்
தட்டியவிரலுக்கு வலியாகின்றாய்
தவில் ///

உன் வலிகளை
மறந்து
எமை மகிழ்ச்சியில்
ஆழ்த்துகிறாய்...//ம்ம்ம் நிஜம் தான் அருமை கவிப்புலவரே!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///இது கிறுக்கலா?அத்தனையும் தத்துவம்.

9 May 2013 22:45 //வணக்கம் யோகா ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஒவ்வொன்றும் சிறப்பான ஹைக்கூ வரிகள் வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடரட்டும் !...

9 May 2013 23:18 //நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்0.

தனிமரம் said...

ஆஹா ஆஹா.. கவிஞராகிவிட்ட + தோப்பாகிவிட்ட, தோப்பாகியும் பெயர் மாற்றாமல் இருக்கிற தனிமரம்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹைக்கூவில் கலக்குறீங்க.

10 May 2013 04:15 //ஹீஈஈஈ! ஏன் அதிரா நான் தனிமரம் தான்!ஹீ நன்றி !!!ம்ம்ம்

தனிமரம் said...

எழுதும் போது பலகதை
எல்லாருக்கும் பிடிக்கும்
எழுதியபின்
எழுத்து தீர்தபின்
வீதியில்!
எழுதுகோல்!
///

சூப்பர்.. ரொம்பப் பிடிச்சிருக்கெனக்கு. உண்மையான கற்பனை.. எழுதிக்கொடுப்பது பேனைதான், ஆனா புகழ் எழுதியவருக்கு..

10 May 2013 04:16 //ம்ம்ம் நிஜம் தான் அதிரா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நேசன் அனைத்துமே அருமை ..இரயில் பயண ஹைக்கூ சூப்பர்ப்

10 May 2013 05:38 //நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அனைத்தும் அருமை//நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

ஹைக்கூ எல்லாமே அருமை.

ஜாக்கெட்,
தவில்,
பணம்,
ரயில்பயணம்,
விஸ்கி

ஆகிய ஐந்தும் மிகவும் பிடித்துள்ளன. நன்கு ரஸித்தேன்.பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

10 May 2013 07:33 //நன்றிகள் கோபு ஐயா முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

reverienreality said...

என்ன இது புது அவதாரம்..
விட்டு பின்னீட்டீங்க....தங்கை வந்த நேரமோ ???? -:)


இது தங்கை எழுதியது தானே....-:)

reverienreality said...

மீண்டும் ஒரு முறை ரசித்துபடித்துவிட்டு ஓடிப்போகிறேன்...Have a nice weekend...

தனிமரம் said...

என்ன இது புது அவதாரம்..
விட்டு பின்னீட்டீங்க....தங்கை வந்த நேரமோ ???? -:)/ஹீஈஈஈஈஈஈ!


இது தங்கை எழுதியது தானே....-:)!இல்லை என் கற்பனையே!ம்ம்ம்

10 May 2013 12:07 /நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

சீராளன்.வீ said...

அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தனிமரம்

தனிமரம் said...

அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தனிமரம்

11 May 2013 08:36 //நன்றி சீராளன் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.