19 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-6

 உண்மையில்  நான் சிலநாட்களில் அதிகமான விற்பனையில் ஈடுபடுவேன் அவற்றை கணக்கில் உடனடியாக காட்டுவதில்லை மாதமுடிவில் தனிப்பட்ட அலுவல்களுக்கு விடுமுறை தேவையான பொழுது இவற்றுக்கு கணக்கு காட்டிவிட்டு நிர்வாகம் தரும் மேலதிக வருவாய்க்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன்!
..
அப்படியொரு என்னத்தில் தான் அன்றும் என் களவை கச்சிதமாக முடித்து விட்டேன் என நினைத்துக் கொண்டிருந்த போது !என் மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்லுவதா விடுவதா என சிறு தயக்கம் .
சகோதர மொழியில் சிலவார்த்தைப் பிரயோகங்களில் நான் கவனமாக இருப்பேன் .மூன்றாம்தர வார்த்தைகள் நாகரிகமாக உடையனிந்தவர்கள் அதிவேகத்தில் வெளியிடும் போது மொழி புரியாதவன் போல் இருத்தல் நலமே!
..
இல்ல சேர் அதுக்காக சனிக்கிழமை செய்யலாம் என இருக்கிறன் என்ற போது எனக்குத் தெரியாது மாதமுடிவில் என் அளவு விற்பனை உன்னால் வீழ்ந்தால் உன்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் தெரிந்து கொள் என்ற அவரின் கடும் தொனி என்னை உழுக்கியது .
நிச்சயம் நான் செய்து முடிப்பேன் என்னை நம்புங்கள்  .உங்களால் தான் நான் இவ்வளவு சுதந்திரமாக வேலை செய்கிறன் !நீங்க செய்யிற உதவிக்கு நான் எப்போதுமே கடமைப் பட்டவன் !உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் என்று நான் வைத்த பனிக்கட்டி கல்யானி கூல்பாரின் சுவைக்கு ஈடாகாது என்றாலும் அவரை குளுர்மையில் நனைத்தேன் என்பிடி தப்புவதற்கு!

.
உண்மையில் நான் பாவிக்கும் சில சகோதர மொழிப் பிரயோகம் சிலரை என்பால் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு உத்தியே! பெளத்த மதப்போதனைச் சொல்களை பாவிக்கும் போது உண்மையான பெளத்தன் கோபத்தை தனித்து அன்பு காட்டுவான் என்ற சமயநிகழ்வுகளில் கேட்ட உபதேசத்தையே மீள் உரைக்கிறேன்! சில உண்மையான மதகுருமார் என்னிடம் இனவாதமற்ற ஆசிர்வாத உரைகளை இவர் வீட்டில் கூறியதையே அவருக்கு ஞாபகம் ஊட்டினேன்!அதையும் தாண்டி இவரிடம் எனக்கிருக்கும் நல்ல அபிமானத்தை பொறுக்க முடியாத சில என்னின நண்பர்கள் வைக்கும் பாசக்கணைகளை இவர்தான் தகர்த்திருக்கிறார்! என்பதை பல ஒன்று கூடல் பொழுதுகளில் அவர்கள் வாயில் இருந்து வரும் போது (போதையில் ஊளரியதை) அறிந்திருக்கிறேன்!

வேகத்தின் ஊடே ராஜகிரியவிற்கு அவரின் வீட்டுக்கதவை திறக்கும் போது அதிகாலை 5மணியாகிவிட்டது! என் நித்திரை போய்விட்டது !
போய்க்குளித்துவிட்டுவா என்று அவரின் காரின் பின் சீட்டில் தயாராக இருந்த புதிய  துவாய்த்துணியைத் தந்தார்!அவரின் காரிலில் அவசரத்திற்கு  2செட் உடுப்பு எப்போதும் இருக்கும்!
வீடு  அமைதியாக இருந்தது நான் குளித்துவர அவர் எனக்கு கோப்பியும் தனக்கு தேனீருடனும்   அன்றைய நாளிதலுடன் வந்தார்!


வீட்டில் எல்லாரும் ஊருக்கு போய்விட்டார்கள் இப்படியே இங்கிருந்து வேலைக்குப் போ!
முக்கியமான விசயம் இனி உன்னை வவுனியாவிற்கு நிரந்தரமாக்கியிருக்கு என்றபோது நானும் ஆடிப்போனேன்
..
தொடரும்

2 comments :

Unknown said...

யோவ் என்னய்யா எத்தனை பதிவுகள் போட்டிருக்கீங்க ஒரே சமயத்தில்??என்னாச்சு??

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கு இந்த நிகழ்ச்சி என் முக்கியமான காலகட்டத்தில்  வாழ்க்கையை உலுக்கிய  ஒரு பகுதி அதனால்தான் இத்தனை நீண்ட பதிவு!