31 May 2011

 ரசித்த படத்தின் பின்னே நானும்!

திரைப்படம் என்ற ரயில் பயணம் என்னை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்கிறது .மேத்தாவின் கவிதையில் சொல்வது போல் இருட்டில் நிழலைத்தேடி ஓடும் மனம் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.படம் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கனும் என்று என் நண்பர்கள் திட்டும் அளவுக்கு நானும் சினிமா என்ற சக்கரத்தில் வளையமாக இருந்திருக்கிறேன்!

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும்  என்பதும் ஒருகாரணம்!

அவர்களுக்கு சகோதரமொழியில் வரும் படங்களை தாண்டி ஹிந்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாடறிந்தது இந்த மயக்கம் அசின் வரை பத்திக்கிச்சு!

நான் அதிகம் சாருக்கானின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் .என் அபிமான நடிகரும், கூட இந்த வரிசையில் கொழும்பில் பணியில் இருந்த போது ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான் !வீனாப்போன ரசிகன் என்ற பட்டம்தந்தால் ஏறுக்கொள்வேன்!அந்தப் படம்!

தில் தோ பாஹல் ஹைய்(dil to pahal hai) சாருக்கானின் வெற்றிப் படவரிசையில் இது ஒரு முத்து .அழகான காதல் கதை நால்வரின் காதலை ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்க்க வைத்த இயக்கம் யாஸ்சோப்ராவின் கைவண்ணம் ,படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் பிடிக்கும் எனக்கு இப்படப் பாடல்கள் என்றும் என்கூடவரும் தாலாட்டு!

ஹிந்தியில் புகழ்பெற்றவர்கள் காதாநாயகர்கள் இருவர், மூவர் சேர்ந்து ஒன்றாக நடிப்பார்கள் இங்கே விஜய்காந்தும் ரஜனியும் சேர்ந்து நடிக்க மாட்டினம்!

இப்படம் கொழும்பில் லிபர்ட்டி மெஜிக் சிட்டி, கிரான்பாஸ் அசோக்கா மருதானை சென்றல் என சுற்றுவட்டாரங்களில் வெற்றிகரமாக ஓடியது யாஸ்சோப்ராவின் தயாரிப்பில் இக்காவியம் வெளிவந்தது சாருக்கானுடன் அக்சைக் குமாரும் போட்டிக்காக சில காட்சியில் வந்து போவார்!

 எப்போதுமே பிடித்த மாதுரிடிக்சித் ,கரிஸ்மாகபூர் என முக்கிய கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் .நிஜத்தில் இக்கதையில் வரும் கரிஸ்மா ஏற்ற பாத்திரம் என் நண்பி ஒருவரின் உண்மை நிலை!

உத்தம் சிங் இப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்திருந்தார் .ராஜாவிற்குப் பிறகு இவரின் இசை என்னை கட்டிப்போட்டு துள்ளிக்குதிக்க வைத்தது .காலத்தின் கோலம் நல்ல இசையமைப்பாளர் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டார்!ஹிந்தியுலகில் இவரின் இழப்பு பேரிழப்பு வெற்றிப்படியில் ஏறும் போது அந்தக் கொடுமையான மரணம் வந்துவிட்டது! 
இவரின் இசையை பின்னாலில் லவ்டுடே சிவா காதல் சுகமானது படத்திற்கு" அடி சுகமா சுகமா சுடிதாரே" பாட்டுக்கு சுட்டுப் போட்டிருந்தார்!

ஆறு பாடலும் பிரபல்ய மாகியிருந்தது இரண்டு பாடல் சகோதரமொழி வானொலியான சிரச வில் பாடல் தரவரிசையில் top 20 ஞாயிறு இரவு 10மணி தொடக்கம் 12மணிவரையில்  இடம் பெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து 1,2 இடங்களை பெற்று முதல்தரவரிசையில் ஒருவருடம் நீடித்தது இது ஒரு சாதனையான விடயம் அன்நாட்களில் !!
தில் தோ பாகல்கேயும், ஹரரே ஹரகுச்சு கோகயா கோகின்ன பேரானா , பாடல்களை உச்சரிக்காத சகோதர மொழி வாலிப உள்ளங்கள் அன்று கிடையாது!நீண்டதூர   பேரூந்துப்பயணங்களில் ஒலிநாடா அறுந்து போகும் வரை ஒலிக்கும்,
அந்தளவுக்கு  வானொலியிலும் ஒலித்து ஒய்ந்தது.ஹரிஹரன் இப்படத்தில் titile பாடலை மிக இயல்பாக பாடி அதிகமாக வடஇந்தியாவில் பிரபல்யமாகியிருந்தார் பிறகுதான் தமிழில் புகழின் உச்சிக்குப் போனார். 
வட இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஸ்கர் இதில் இருபாடல் பாடியிருப்பார் .ஒருபாடலின் இடையே அவரின் ஹம்மிங் தமிழில் ஜொன்சியிக்குப் பிறகு அதிகம் கவர்ந்தது .கரிஸ்மாவின் ஒருதலைக் காதலுக்கு இசைவாக வரும் பாடலில் இந்த ஹம்மிங் இசைக்குயிலின் குரல் ஊடாக முன்னால் நண்பனின் முன்னால் தோழியின் நினைவு வந்து போகிறது.

இன்னொருபாடல் மழையில் பாடுவார்கள் இதை தமிழில் அறிந்தும் அறியாமல் படத்தில் இரண்டாவது ஹீரோவிற்கு கொடுத்து மூலப்பாடல் காட்சியை கொத்துப் பரோட்டாவாக்கியிருப்பார்கள்!

படத்தில் கரிஸ்மாகபூர் நடிப்பில்  ஒரு காட்சியில் அவரின் காலில் ஏற்படும் நரம்பு விலகும் காட்சியில் கமரா அவரின் காலைச் சுற்றி ஓடும் சில கனங்களில் காட்டும் பாவனை மயூரி படத்திற்குப் பின் என்னை மிகவும் பாதித்தது .வெற்றியடையும் போதுவரும் தடங்கள் ஆண்மாவை உலுக்கும் அப்படித்தான் இதில். கரிஸ்மா பரம்பரை நடிப்பில் தன் தந்தையை நிரூபித்திருப்பார்!

மதுரிடிக்சித்தின் நடிப்பை சொல்ல இரண்டு பதிவு போடலாம்! ஏற்ற பாத்திரத்தை  பானுப்பிரியா போல் சிறப்பாக செய்யக்கூடியவர் .இவரும் சன்சய்தத்தும் நிஜத்தில் ஜோடி சேரப் போவதாக அன்நாளில் நாளிதழ்கள் பத்திவெச்சது!
சாருக்கானின் நடிப்பை குறும்பை, ரசித்துப்பார்த்தேன்!

இவர்களைத் தாண்டி இப்படத்தில் அக்சைக்குமார் வந்துபோகும் காட்சி செய்யும் தியாகம் என் முன்னால் நண்பனுடன் காலிமுகத்திடலில்  மாலையில் தோன்றிய வாக்குவாதம் இரவு கொழும்பு-12 இல் வந்து சேரும் வரை.  இரு மொழிகளில் ஆட்டோக்காரன் காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு  நீண்டது. என் நட்புக்கு  முடிவுரை எழுதிய கனங்கள்..!

இப்படிபல விடயங்கள் இப்படத்தோடு  என் நினைவில் வந்து போகிறது .எப்போதும் மனதிற்குள்  சிலரை நினைக்கும் போது என் அலுமாரியில் இப்படத்தை தேடி எடுத்து சில காட்சிகள்  ரசித்தால் சில வருடங்கள் பின்னோக்கிப் போகிறது மனசு!

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!

15 comments :

நிரூபன் said...

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980//

மாத்தே, ஆயுபோவான், கோமதா,,,

நிரூபன் said...

ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான்//

ஐயோ, ஐயோ..
இது படத்தில் ஓடிக் கொண்டிருக்கிற ரயில் எப்போ விலகும், நடிகை குளிக்க ஆடையினை எப்போது அவிழ்ப்பாள் எனும் எண்ணத்தில் படம் பாரக்கப் போன நபரின் கதை போல இருக்கே.

தனிமரம் said...

இந்தப்  படத்தில் கவர்ச்சி என்று சொல்ல முடியாது நண்பா.  படத்தின் கதைக்குள் நுழைந்து விட்டாள் அவர்களின் இயல்பை ஆராய்வது தான் என் ரசனை நீங்கள் சொல்லும் என்னத்துடன் இப்படத்தைப் பார்த்தால் ஏமாற்றம் மிஞ்சும் அதற்கு அருகில் இருந்த திரையரங்கில் அப்படியான படம் ஓடியது ஹவுஸ் புல் காட்சியாக! படத்தில் ரயில் காட்சிகள் இல்லை நான் கூறியது என் பயணத்தில் ரயில் என்று தான் நண்பா! படம் இசை சம்மந்தப்பட்ட காதல் காவியம்!

தனிமரம் said...

நிரு மாத்தயா ஆவாட்ட மம ஸ்தூதிவந்தேனவா! ஒயா மகே அம்பயாலுவ!

Unknown said...

அப்போ பாருங்களேன்...கொழும்பில் இருக்கையில் ஒரு தியேட்டர் விட்டதில்ல போல,,,

Unknown said...

இதென்ன படம்...நான் கேள்விப்பட்டதே இல்லையே...வெரி சாரி,,நான் இங்கிலீசு படம் மட்டும் தான் பாப்பனாம்,

தனிமரம் said...

தியேட்டர் எங்களின் பாதுகாப்பு அரனாக இருந்தது அன்நாட்களில் நண்பா!

தனிமரம் said...

ஆங்கிலப் படத்திற்குப் போவதென்றால் ஏதோ ஸகிலா படத்திற்குப் போகிறான் என்று ஒரு எண்ணம் என்னுடன் இருந்தவர்களுக்கு!அதையும் தாண்டி ஆங்கிலத்தில் 5 வகுப்புத்தாண்டவில்லை! நன்றி உங்களுன் வருகைக்கு!

நிரூபன் said...

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!//

வாவ், முடியலை, நம்ம நேசனா இப்படி என்று ஆச்சரியப்பட வைக்கிறீர்களே சகா!
தேறிட்டீங்க மாப்பு.
எழுத்துப் பிழைகளற்ற, ஒரு அருமையான மொழி நடையில் ஆங்காங்கே சுவாரஸ்யம் நிறைந்த நகைச்சுவை வரிகளுடன் அற்புதமான படைப்பினைத் தந்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

இந்தப் படத்தினைப் பார்க்கத் தூண்டும் வகையில் ஒரு காத்திரமான கண்ணோட்டத்தினை வழங்கியிருக்கிறீர்கள்.

உண்மையில் உங்களுக்குள் ஒரு காத்திரமான எழுத்தாளன், கற்பானாவதி, நிஜங்களைப் பதிவு செய்யும் அற்புத சக்தி ஒழிந்திருக்கிறது.

தொடர்ந்தும் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து நல்ல பதிவுகளைத் தர வேண்டும் சகோ.

நிரூபன் said...

Nesan கூறியது...
நிரு மாத்தயா ஆவாட்ட மம ஸ்தூதிவந்தேனவா! ஒயா மகே அம்பயாலுவ!//

மச்சாங், சிங்கள டிக்க டிக்க தன்னுவ,
உண்மையில் ஒரு சில பொறுக்கு வசனங்கள் தான் சிங்களத்தில் எனக்குத் தெரியும் சகோ.

தனிமரம் said...

நன்றி நண்பரே உங்களின் கருத்துரைகளுக்கு பல படங்களை பார்க்கும் வாய்ப்பினை காலம் எனக்கு கொடுத்திருக்கிறது இன்றுவரை என்னை வழிநடத்துவது சினிமாவும் இலக்கியமும்தான்! முடிந்தவரை எழுத்துப் பிழைகள் தவிர்த்து எழுத முயற்ச்சிக்கிரேன்! எனக்கும் சகோதர மொழியை சகோதர நண்பர்கள்தான் கொஞ்சம் கற்றுக்கொடுத்தார்கள் பாதுகாப்பு என்ற வேலி என்னை கற்றுக்கொள்ளத் தூண்டியது எனக்கும் சிறிதுதான் தெரியும்!

தனிமரம் said...

உண்மையில் மொழிதாண்டிப் பார்க்க வேண்டிய நல்ல படம்!

ஹேமா said...

வீணப்போன சாருக்கான் ரசிகனுக்கு வாழ்த்துகள்.எனக்கும் அந்தப் படத்தைப் பாக்கவேணும்போல இருக்கே !

தனிமரம் said...

நன்றி தோழி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் . இப்படம் இப்போது ஐரோப்பிய மொழிகளிலும் பின்னனிக்குரல் கொடுக்கப் பட்டு vcd. வந்துள்ளது! இங்கே பிரென்ஸ் மொழியில் இருக்கிறது.