இப்படி ஒருநாளில் தான் நீ எங்கள் சுதந்திர தீபத்தை மொனிப்பதாக கூறிய வார்த்தைகள் ஊடே நம் வரலாறு தோற்றதாக அச்சு ஊடகங்களும்
இலத்திரனியல் ஊடகங்களும் எங்கள் செவியில் கொடிய திரவகத்தை கொட்டியது!
..
மனுநீதியற்ற அந்த வெள்ளரசுப் பேய்களின்
ருத்திர தாண்டவத்திற்கு என் உறவுகள் உதிர்ந்து கொண்டிருந்த அக்கனங்களில் !நாங்கள் கொட்டும் பணியிலும் ஐரேப்பிய நகரங்களை கோசங்கள் முழங்கி முண்டியடித்த போதும்!
எங்கள் உறவுகளைக் காக்க எந்த தேவதூதனும் இறங்கிவரவில்லை!
..
குறுநிலப்பரப்பில் எம் சந்ததிகள் குற்றுயிரும்,குதறல்களுக்கும் கொத்துக் குண்டுக்கும் கோரமுகமாக அவலத்திற்கு ஆளாகிய போது அனைத்துலகம் பயங்கரவாதம் என்ற பூதக்கண்ணாடியை தன் முகத்தில் பூட்டி எங்கள் தீபத்தை சிதைத்த கொடுமையை இனி ஏழுதலை முறைக்கும் பறைசாற்றும் இனமாகிப்போன
ஈழத்தவன்!
..
தியாகத்தில் முதன்மையானவர்களின் பண்புகளை எல்லாம் வக்கிரப் பிறவிகள் செய்த கொடுமை கண்டு புலம்பும் இனமாகி இன்றும் ஏதும் செய்யும் வழியின்றி இராமனை இழந்த அஸ்தினபுர குடிகள் போல் அல்லல்படுகிறோம் அகதிகளா!
என்று வரும் விடிவு என்ற ஏக்கத்துடன்!கழிகின்ற சிறை வாழ்க்கையூடும் சிதைக்கப் படும் இனமாகவும் பாதுகாப்பு வேலிகள் தாண்டி வரமுடியாத நிலங்களை இழந்து!ஏதோ! வாழ்கிறோம்!!
4 comments :
still we are waiting for our annan.
http://kaatruveli-ithazh.blogspot.com/
நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நம்பிக்கையுடன் தான் நானும்!
உணர்வுள்ள ஈழத்தமிழனின் ஆதங்கம்.காத்திருப்போம் நேசன் !
நன்றி தோழி உங்களின் கருத்துரைக்கு!
Post a Comment