04 May 2011

எனக்குப் பிடித்த பாடல்-1

 காற்றில் நாளந்தம் பல பாடல்கள் இனைய வானொலிகள் மூலமும் ,தனியார் வானொலிகள் மூலமும் ஒலிபரப்பாகிவருகின்றது!
 ஆயிரம் பாடல்களில் சில குறிப்பிட்ட பாடல்கள் அதிக பிரபல்யம் ஆகின்றது  .வானொலிகள் தரவர்சை படுத்துவதில் ஒவ்வொரு வருக்கும் வித்தியாசம் பெறுகிறது!
..
இப்போதெல்லாம் தாயகத்தில் இருந்த போது பாடல்களை கேட்டு ,ரசித்த ரசனை மாறி விட்டது !புலம் பெயர்வாழ்வில் தேவையற்ற பதைபதைப்பு தொற்றிவிட்டது!
.. 
புதிய பாடலில் அன்மையில் வெளியான கோ படப்பாடலில்  ""எண்ணமோ ஏதோ .." என்னை அதிகம் வசிகரித்துள்ளது!
மென்மையான ஹரிஸ் ஜெயராஜ் இன் இசையில்  மூவர் இப்பாடலை யாத்திருக்கிறார்கள் .கார்க்கி,சிரிச்சரன்,எம்சி ஜெசே! என்று ஒரு தகவல் கூறுகிறது!மூவரும் பின்னிய மாலையை குரல் கொடுத்து உணர்வு ஊட்டியவர்கள் அலப்பு ராஜூ, பிரசாந்தினி( இவர் மலேசியா வாசுதேவனின் புதல்வி) இடையில் வரும் ராப் எனப்படும் துள்ளலுக்கு பாடல் ஆசிரியர்களில் சிரிச்சரன்,எம்சிஜே  துனைக்குரல் கொடுத்திருகிறார்கள்!
..
கற்பனைகளில் கவிஞர்கள் புல்லரிக்க வைக்கிறார்கள் மென்மையான காதலின் பாவத்தை பின்னியிருக்கிறார்கள்.. "மனதில் ஏதோ முட்டிமோதுகிறது "என்ற வரிகலாகட்டும் குவியம் இல்லா காட்சிப் பேழை"     அரைமனதாய்  விடியுது என் காலை ""மெட்டு அவிழ்கிறது "" என்ற வரிகள் ஊடாக ஒரு ஆண்மகனின் காதல் வலி ரணங்களை சிறப்பாக படம் பிடிக்கும் வரிகள் வைரமுத்துவின் வாரிசின் கைவண்ணம் போலும் என நினைக்கிறேன்!
.. 
"நானும் நீயும் எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமா? காற்றில்  கூட அவளின் சிந்தனையில் அலையும் அவனின் மனநிலையை சிறப்பாக கவிஞர்கள் காதலின் கருவை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்!
..
பாடலுக்கு சிறப்பாக குரல் கொடுக்கும் அலப்பு ராஜீ வின் குரலை நான் இப்போதுதான் கேட்கின்றேன் இவர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் போல்  வசணத்தில் வாடையடிக்கிறது தெரிந்தவர்கள் கூறுங்கள்!
..
இன்னும் காட்சியை கானவில்லை பார்ப்போம் சிறப்பான பாடலை சிலவேலைகளில் சீரலித்துவிடுவார்கள் இயக்குனர்கள்  இப்படம் ஒளிப்பதிவாளர் k.v. ஆனந்த் தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது பார்ப்போம் காட்சி எப்படி இருக்கிறது  என்று!.

.முன்னர் வானொலிகளில் பாடலின் ஆசிரியர் பெயர்கள், பாடியவர்கள் விபரம் கூறுவார்கள். இப்போதெல்லாம் அவசர உலகில் அறிவிப்பாளர்கள் அடுத்த பாடலுக்கு ஓடும் காலம் போலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபணத்தின் பணி சிறப்பாக காரணம் அவர்கள் அறிவிப்பாளர்களின் தேடலுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி பாடலை ஒலிபரப்பின தால்தான் என்பேன்! 
..
வலையுலகில் இருக்கும் நண்பர்களே சில புதிய அறிவிப்பாளர்களின் கடமையை அவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்டுங்களேன்!
 

2 comments :

ம.தி.சுதா said...

அருமையான ரசனை உங்களுக்கு சகொதரம்... என்னமோ ஏதோ அருமையான ஒரு பாடல்..

தனிமரம் said...

நன்றி நண்பரே! உங்களின் கடுமையான பணிக்கிடையிலும்  என் பதிவுகளுக்கும் கருத்திட்டமைக்கு! 
 .. நட்புடன் நேசன்!