28 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-24

கிராமத்தவன் வானம் பார்த்தவன்  பட்டணத்து பகட்டு வாழ்வு தெரியாதவன் என்பார் முத்துக்குமார் கிராமம் நகரம் மாநாகரம் தொகுப்பில்!

 அப்படித்தான் கிராமத்து வாழ்வும் ராகுலுக்கு .இனிய தாகப் போய் கொண்டிருந்தது .

மீண்டும் தன் பள்ளியில் பழைய நண்பர்கள் நண்பிகளுடன் சேர்ந்து கொண்டான் .அவன் வழமையாக சேரும் தோழிகள் எல்லாம் நீ பதுளையில் போன பின்பு பேச்சே மாறிவிட்டது. நீ மலையகத் தமிழ் (இதில் வார்த்தை மாற்றிவிட்டேன் யாழ்ப்பாணத்தவர் எப்படி பேசுவார்கள் என்பதை எழுத்தில் வடித்து பிரிந்து நிற்க முடியாது தனிமரம் .ராகுலும் அதைத்தான் என்னிடம் கேட்டான் அதனால்   தவிர்க்கின்றேன் .சில இடங்களில்) பேசுகின்றாய் என்று அன்று அருகில் இருந்து சொன்ன ராஜி .

இன்றும் ஐரோப்பாவில் காணும் போதும் நீ அப்படியேதாண்டா இருக்கின்றாய். என்று செல்லமாக சொல்லிச் சிரிக்கும் போது நான் கேட்பது வழமையாகத் தானே கதைக்கின்றன்.

.ராகுல் நீ சரியாப் பேசிறீயா?
 .ராஜி!

.நீ அப்புறம் என்பதே நாங்க சப்பறம் பார்த்த ஞாபகம் வருகின்றது.

.குமார் அவளுக்கு சார்பாகப் பேசும் போது அன்று பள்ளியில் சிரிப்போடு அதைவிட்டு விட்டான். நீங்க பாலம் தாண்டி போய் வாருங்கோ புரியும் எல்லாம்!

 பங்கஜம் பாட்டியிடம் சொல்லுவன் என்ர பாட்டி யார் தெரியும் தானே ?

ஓம் நாங்க பகிடிக்குச் சொன்னாங்க !ராகுல் இனி ஒன்றும் பேசமாட்டம் நீ புது ஆட்களோட ஊர் சுற்றியதைத் தான் இப்படி பகிடி பண்ணினோம்.

 இனிச் சரி நல்லா படிப்பம்டா !
நீ படி ராஜி நான் வாய்ப்பாடு பாடமாக்கணும்..கள்ளுக்குடித்துவிட்டு வரும் கணக்கு வாத்தியார் கருக்கு மட்டையால் தலையில் அடிப்பார் 12 வாய்ப்பாடு பாடம் இல்லாதவர் எழும்புங்கோ என்றாள்.

 இந்த மேனகா என்னைத்தான் கைகாட்டுவாள் ராஜி .

நீ யோசிக்காத இன்று பள்ளி
முடிய அவள் மயிரை இழத்து அடித்துப் போட்டு வாரன்.

 வயலுக்கால ஓடிவிடலாம் வீட்டை. சரியா அப்போது சரி என்று தலையாட்டிவிட்டு அடுத்த பாடம் நடந்து.

 சண்டை போட்டு வீட்டு போனான்

. கிராமத்துக்காற்றில் விவசாயம் வீச வெளிக்கிட்டது. வயல் உழுதார்கள். வரம்புகட்டினார்கள். வளவுகள் அளந்தார்கள்.

 பங்கஜம் பாட்டியிடம் ராகுல் கேட்ட பக்கத்துவளவு எனக்குத் தான் தரனும்! எதிர்வீட்டு மேனகா கொஞ்சநாளா என்னொடு சண்டை போடுகின்றாள்.

 வேலி போடேக்கிள நான் யாற்ற பேரன் என்று காட்டணும் பாட்டி .

சீச்சீ சின்னப்பிள்ளைகள் சண்டை போடக்கூடாது .

அவள் பெரியவள் ஆனால் நீதான் கட்டுறியோ? யார்கண்டா !பேராண்டி.

 பேரணுக்கு நல்லாத் தான் செல்லம் கொடுக்கின்றீங்க பொரிமா ஊட்டிக்கொண்டு. பேசுற பேச்சா மாமி!

. அப்ப
வந்தார் ஐயா.

நெல்வயல் நிறைந்து வசந்தம் வாழ்வை பூத்துக்குழங்க வைத்திருந்தது.
 நெல்விளைந்த இடங்கள் எல்லாம் எள்ளு விதைத்தோம். இடையில் கவுப்பி போட்டோம். பயறு, சோளம்,சானை என   வயல்கள் பருவம் தந்தது .

கிளிகள் வரும் கொத்த என்று வலை வைத்தும், சட்டிபானையில் பொம்மை செய்தும் வயலில் வைத்தோம்!

.பனைமரப்பொந்தில் கிளிகள் பிடித்தோம் .மாலையில் பட்டம் விட்டோம் .கேணியில் குதித்தோம்.

 கேட்க யார்?

 இது எங்கள் ஊர் என்று குயில்களாக திரிந்தோம் .

கிளிகள் பச்சை மட்டுமா ?

பக்கத்துவிட்டு பாறாத்தையின் பேத்தியும் ஒரு கிளிதான் .

தண்ணிக்குடத்துடன் வயலுக்கு வந்தா  !

அன்று வரும் வழியில் தள்ளிவிட்டு பானை உடைந்ததால்.

 பங்கஜம் பாட்டி கிளுவங்கம்பு முறியும் வரை காலுக்கு கீழ் அடித்தா.

 பெட்டைப்பிள்ளையோட என்னடா வீரம் காட்டுற .

அவள் உடைத்தது மண்பானை என் வீட்டில் இருப்பது பித்தளைப் பானை.

 இப்ப அதை அல்லவோ கொடுக்க வேண்டிக்கிடக்கு .

நீ பதுளை போய் வந்த பின் குழப்படி கூடிப்போச்சு

.அம்மா அடுப்படியில் இருந்து சொல்லுவா.

அந்த வாழ்க்கை எப்படித் தொலைந்தது.!ஏக்கமான நாட்கள் கிராமத் தென்றல் கூவியது மழைமேகங்கள் வரும் என்று வந்தது யுத்த மேகங்கள். !!


அதுவரை எங்கள் வீட்டில்
k.s ராஜா,ராஜேஸ்வரி சண்முகம்,சற்சொரூபவதி நாதன்,மனோகரி சதாசிவம்  என்பவர்களின்  இலங்கை வானொலிக்குயில்கள் போய்.

 ஐஸ்பழ வான் வரும் போது !

"கடல் ஏன் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில். நனைய வைத்தான் ""
பாடல் போய்

"தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை இழக்கலாமா."

என பாடிக்கொண்டு தெருக்கள் எங்கும் சுற்றிவந்தது ஐஸ்வான்.

"காந்தி தேசமே காவல் இல்லையா பாடல் போய் புதிய குரல்கள் குந்தியிருந்த .

சந்தி எங்கும் கீதம் இசைத்தது.

 "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகின்றோம் தமிழ் ஈழமண்ணை மீட்க ஓடிப்போகிறோம்"

எங்கும்  அழைப்புச்  சங்கு ஊதியது இடைவிடாத இசையாக இதயத்தில் இருந்தது ராகுல் மனதில் இந்தப்பாடல்!
                    
முகம் தொலைந்தவன் வருவான் விரைந்து!!!!!!!
//////
.
பகிடி-நகைச்சுவை -யாழ் வட்டார மொழி
அப்புற்ம்- பிறகு -மலைய்க வட்டார மொழி

40 comments :

Anonymous said...

aaaaaaaaaaaaa vadai enakkuththaan

Anonymous said...

kathaiyai padichipottu vanthu comment podurenan anna

தனிமரம் said...

இங்கு வடை கிடைக்காது கலை பால்க்கோப்பிதான்! முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!வடைக்கு அச்சயபவான் தி.நகர் போகனும்! ஹீ

Anonymous said...

eezham paattu ketten annaa

தனிமரம் said...

ஈழம் பாட்டுக்கேட்டீங்களா!ராகுலிடம் சொல்லிவிடுறன்!

Anonymous said...

உங்களை கருவாச்சியிடம் விட்டுவிட்டு போகிறேன்...

Yoga.S. said...

இரவு வணக்கம் நேசன்!அந்த நாட்கள் மீண்டு வருமா?வரவேண்டும் என்பதே பிரார்த்தனை தினந்தோறும்.கலை வந்து இரவுக் கோப்பி குடித்துவிட்டுப் போயிருக்கிறா போல?எக்ஸாம் தள்ளிப் போய்விட்டதாம்.படிக்கட்டும்.

தனிமரம் said...

ரெவெரி அண்ணா இப்படி என்னை இக்கட்டில் மாட்டிவிட்டுப் போகலாமா?? அவ்வ்வ்வ்வ்வ்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா!
மீண்டும் வராத நாட்கள்.அது பிரார்த்திப்போம்!!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

வந்திட்டேன் வந்திட்டேன்.

கருவாச்சி....கிர்ர்ர்ர்ர்ர்ர் !

கருக்குமட்டை யோகா அப்பாவுக்கு நான்தான் பார்சலில அனுப்பப்போறன்.கருவாச்சியை பிறகெங்க நான் காப்பாத்துறது அவரிட்டயிருந்து.ஆளைப்பாரு காப்பாத்தட்டாம் !

ஏன் யோகா அப்பா மிகவும் சோர்ந்துபோயிருக்கார் இப்ப ஒரு கிழமையா.ஏதாச்சும் உடம்பு சரில்லையோ.அம்பலம் ஐயாவையும் காணேல்ல.என்னாச்சு நேசன்.கேளுங்கோ !

ஹேமா said...

நேசன் இங்க வாறவை எல்லாரும் ஓட்டுப்போட மறக்கினம்.ஏன்?நான் எப்பவும் எல்லாத்திலயும் ஓட்டுப்போட்டுவிட்டுத்தான் வாசிக்கிறன்.சொல்லி வையுங்கோ ஓட்டு போடச்சொல்லி !

ஹேமா said...

அருமையான பாடல் நேசன்.திரும்பத் திரும்பக் கேட்டேன்.பிடிச்ச பாட்டும் கூட !

நானும் கிட்டத்தட்ட 8-9 வயதுவரைக்கும் மலையகத் தமிழ்தான் கதைச்சேன்.என் அம்மம்மா தேயிலைக்கட்டை எண்டுதான் என்னைப் பேசுவா.ஆனால் அந்தத் தமிழின் சுவை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.இல்லையோ நேசன்.

கிளிகள் பச்சை மட்டுமா ?

பக்கத்துவிட்டு பாறாத்தையின் பேத்தியும் ஒரு கிளிதான்....என்ன ரசனையப்பனே !

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
சரியான வார்த்தை...
கிராமத்தின் வாசம் தெரிந்தவன்
நகரத்தின் நெரிசலுக்கும் அதன் புழுதிக் காற்றுக்கும்
வாழ்வியல் மாறுபாடுகளுக்கும் சற்றும் ஒத்துப்போக
முடியாது.
வாழ்வின் நிலைத்தன்மைக்காக வேண்டி எல்லாவற்றையும்
மனதில் பூட்டி வைத்துக்கொண்டு தான் வாழக் கற்றுக் கொள்வான்.

கிராமத்தின் பின்னணிகளை நீங்கள் கூறக்கூற ....
நெல்மணிகளை கொத்தவந்த பறவைகளை
தன் காதில் அணிந்திருந்த பொன் கடுக்கனை
தூக்கி எறிந்த அந்த சங்ககால பாட்டிகள் தான்
நினைவுக்கு வருகின்றனர்...

அப்படியே ஒரு நடவுப் பாட்டு பாடனும் போல இருக்குது நேசன்...
இன்றைய பகுதியைப் பார்த்ததும்ம்....

மகேந்திரன் said...

எலந்த மலை அடிவாரம்
எழுகாணி நிலமடியோ!
எட்டு ஊரு
நிமிர்ந்து பார்க்கும்
எங்க தங்க பூமியடி!

வயல் விளஞ்சி
நின்னுதுன்னா
வரப்பெல்லாம் மறஞ்சிபோகும்
வாய்க்காலு ஓரத்தில
நெல்மணிகள் தலைசாயும்>......

கற்பனைகள் எங்கையோ போகுது
நேசன்...

Yoga.S. said...

காலை வணக்கம் நேசன்,மற்றும் அனைவருக்கும்!///////ஹேமா said...

வந்திட்டேன் வந்திட்டேன்.

கருவாச்சி....கிர்ர்ர்ர்ர்ர்ர் !

கருக்குமட்டை யோகா அப்பாவுக்கு நான்தான் பார்சலில அனுப்பப்போறன்.கருவாச்சியை பிறகெங்க நான் காப்பாத்துறது அவரிட்டயிருந்து.ஆளைப்பாரு காப்பாத்தட்டாம் !

ஏன் யோகா அப்பா மிகவும் சோர்ந்துபோயிருக்கார் இப்ப ஒரு கிழமையா.ஏதாச்சும் உடம்பு சரில்லையோ.////அப்படி எதுவுமில்லை,மகளே!கொஞ்சம் மன நிலை தான்.........!சரியாகி விடும்,கவலை வேண்டாம்.அப்புறம்,கலை.............. உயர் கல்வி கற்கும் அவருக்கு கருக்குமட்டை(பனை மட்டை)?சீச்சி,அதுவெல்லாம் வேண்டாம்.பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.மீண்டும் பார்க்கலாம்.

தனிமரம் said...

அயல் தேசம் போய் வந்ததால்யோகா ஐயா கொஞ்சம் அலர்ஜி போலும் மனதிற்கு அதுதான் ஹேமா அக்காள்!

தனிமரம் said...

அருமையான பாடல் நேசன்.திரும்பத் திரும்பக் கேட்டேன்.பிடிச்ச பாட்டும் கூட !

நானும் கிட்டத்தட்ட 8-9 வயதுவரைக்கும் மலையகத் தமிழ்தான் கதைச்சேன்.என் அம்மம்மா தேயிலைக்கட்டை எண்டுதான் என்னைப் பேசுவா.ஆனால் அந்தத் தமிழின் சுவை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.இல்லையோ நேசன்.
//

இது ராகுலிடம் கேட்கனும் ஹேமா நேசனுக்கு அதிகம் தெரியாது இருந்தது இரண்டு வருடம் தான் அங்கே!
கிளிகள் பச்சை மட்டுமா ?

பக்கத்துவிட்டு பாறாத்தையின் பேத்தியும் ஒரு கிளிதான்....என்ன ரசனையப்பனே !
// அதுவும் ராகுலிடம் கேட்கனும் அப்போது பாரத்தையின் பேர்த்தி எப்படி இருந்தால் என்று இப்போது பக்கத்து நாட்டில் இருப்பது தனிமரத்துக்கும் காட்டியிருந்தான் குடும்பபடம் இன்று மட்டும் !

தனிமரம் said...

நேசன் இங்க வாறவை எல்லாரும் ஓட்டுப்போட மறக்கினம்.ஏன்?நான் எப்பவும் எல்லாத்திலயும் ஓட்டுப்போட்டுவிட்டுத்தான் வாசிக்கிறன்.சொல்லி வையுங்கோ ஓட்டு போடச்சொல்லி !

28 March 2012 13:23 
// நான் இப்போது அரசியல் பேசுவதால் பலர் ஒரங்கட்டுகின்றார்கள் ஓட்டுப்போடாமல் விரும்புவது அவர்கள் விருப்பம் ஹேமா.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!
பலகடமைக்கு இடையிலும் என் பதிவு படித்து பின்னூட்டத் துடன் புத்துணர்ச்சி மிக்க இனிய கவிதை தந்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியத்திற்கு அடியவனின் நன்றிகள் பல.கிராமம் தொலைத்தவர்கள் அதிகம் தான்!
நன்றி மகேந்திரன் அண்ணா.

தனிமரம் said...

ஏன் யோகா அப்பா மிகவும் சோர்ந்துபோயிருக்கார் இப்ப ஒரு கிழமையா.ஏதாச்சும் உடம்பு சரில்லையோ.////அப்படி எதுவுமில்லை,மகளே!கொஞ்சம் மன நிலை தான்.........!சரியாகி விடும்,கவலை வேண்டாம்.அப்புறம்,கலை.............. உயர் கல்வி கற்கும் அவருக்கு கருக்குமட்டை(பனை மட்டை)?சீச்சி,அதுவெல்லாம் வேண்டாம்.பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.மீண்டும் பார்க்கலாம்.// காலை வணக்கம் யோகா ஐயா.
கருக்குமட்டையால் அடித்தால் இங்கு கம்பிதான் எண்ண வேண்டும் கலைக்கு இது தெரியும்.ஹீ ஹீ

Anonymous said...

ஹேமா அக்கா கருக்கு மட்டையிலிருந்து காப்பாற்றுவினம் எனதுப் பார்த்தால் நீங்களே மாமாக்கு கருக்கு மட்டை பார்சல் அனுப்பப் போறிங்களே ...அனுப்புங்கோ அனுப்புங்கூ ...
நீங்கள் எனக்கை கருக்கு மட்டைதான் அனுப்புவினம் எண்டால் நான் அயித்தானுக்கு நிறைய காய்ந்த கருக்கு மட்டை மரத்தைஎ அனுப்பி வைத்து விடுவினம் ...பார்த்துக் கொள்ளுங்கோ ...

Anonymous said...

பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்////////////////////////////
பக்குவாமா சொன்னால் நான் திருந்தி விடுவேனாம் ...அவ்வவ்
மாமா இன்னும் என்மேல எம்புட்டு நம்பிக்கை வைத்து இருக்கினம் ...

Anonymous said...

தனிமரம் said...
ரெவெரி அண்ணா இப்படி என்னை இக்கட்டில் மாட்டிவிட்டுப் போகலாமா?? அவ்வ்வ்வ்வ்வ்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!//////////////////


அவ்வவ் என்னது இக்கட்டா .

ரேவேர்ரி அண்ணா உங்களுக்கு ஒரு நாள் இருக்குதாக்கும் கச்சேரி ....

ரீரீ அண்ணா நான் உங்க மேல எம்புட்டு மரியாதையை வைத்து இருக்கினம் ,,,என்னைப் போல் தப்ப என்னிட்டிங்களோ

Anonymous said...

ஹேமா said...
ஓட்டுப்போட மறக்கினம்.ஏன்?!///////////////////////

ஏனென்டால் எனக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது வரவில்லை அதான் ..

Anonymous said...

எப்பவும் எல்லாத்திலயும் ஓட்டுப்போட்டுவிட்டுத்தான் வாசிக்கிறன்.சொல்லி வையுங்கோ ஓட்டு போடச்சொல்லி ///////////

அக்கா வோட்டு எங்கப் போடணும் .........எனக்கு அதுலாம் தெரியாதே ...என்ட குரு அதைப் பற்றி என்னிடம் ஒண்டுமே கதைக்கவில்லையே ..

Anonymous said...

ஏனென்டால் எனக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது வரவில்லை அதான் ..
அய்யகூ மாமா நீங்கள் சோர்ந்து போயி இருக்கினம் ..கவலைப் பட்டால் ஒண்டுமே நடக்காது தானே மாமா ...கவலைப் படாதிங்கோ மாமா ...எல்லாம் சரி ஆகி விடும் ...மனசை குழப்பிட்டால் ஒரு வேலையும் நடக்காது ...கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு தெம்பா வேலைப் பாருங்கோ மாமா

Yoga.S. said...

கலை said...

ஏனென்டால் எனக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது வரவில்லை அதான் ..
அய்யகூ மாமா நீங்கள் சோர்ந்து போயி இருக்கினம் ..கவலைப் பட்டால் ஒண்டுமே நடக்காது தானே மாமா ...கவலைப் படாதிங்கோ மாமா ...எல்லாம் சரி ஆகி விடும் ...மனசை குழப்பிட்டால் ஒரு வேலையும் நடக்காது ...கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு தெம்பா வேலைப் பாருங்கோ மாமா.////இத்தனை நாளும் "அவர்"(கடவுள்)மீது பாரத்தைப் போட்டுத்தான்,அவர் பாரம் தாங்க முடியாமல் முள்ளிவாய்க்காலில் "கை" விட்டு விட்டுப் போனாரோ?அவருக்குத்தான் வெளிச்சம்!இப்போது கொஞ்சம் கருணையுடன் செத்துத் தொலைந்தவர்கள்(மன்னிக்கவும்,அவ்வளவு வெறுமை,ஆதங்கம்,வெப்பிசாரம் எல்லாம்)))ஆவியின் வெப்பம் தாங்க முடியாமல் கண் திறந்து பார்ப்போம் என்று...............................!

Yoga.S. said...

கலை said...

பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்////////////////////////////
பக்குவாமா சொன்னால் நான் திருந்தி விடுவேனாம் ...அவ்வவ்
மாமா இன்னும் என்மேல எம்புட்டு நம்பிக்கை வைத்து இருக்கினம்.///எனக்கு பெண்குழந்தைகள் மேல் அதீத நம்பிக்கை உண்டு!சிலவேளை வெளிநாடுகளில் அது பொய்த்துப்போக வாய்ப்பும் இருக்கலாம்!தாய் நாட்டில்,தமிழ் நாட்டில் கடைசிக் காலத்தில் கஞ்சியாவது ஊற்ற மாட்டார்களா,என்ன????

Yoga.S. said...

தனிமரம் said...

அயல் தேசம் போய் வந்ததால்யோகா ஐயா கொஞ்சம் அலர்ஜி போலும் மனதிற்கு அதுதான் ஹேமா அக்காள்!////ஒன்றுமில்லை,எல்லாம் "அந்த" நினைவு தான்!கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் அயலவர்,ஊரவரைப் பார்த்ததில் வந்த வினை.ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவூட்டிப் பார்க்கையில் ........................................................ஐயோ என்று குளறி அழவேண்டும்போல்.................வேண்டாம் விட்டுவிடலாம்.பார்க்கலாம் நேசன்.

துரைடேனியல் said...

அருமையாக இருக்கிறது மலையகத் தமிழ். ரூபவாஹினில ஒரு காலத்துல கேட்ருக்கேன். இப்போ நீங்க ஹேமா கதைக்கிறது செம ரகளையாக இருக்கு. அழகுத் தமிழ்தான் உங்க பாஷை. மகேந்திரனின் பாடலும் அருமை. பின்னூட்டங்கள் சுவையாக இருக்கின்றன.

தனிமரம் said...

ஹேமா அக்கா கருக்கு மட்டையிலிருந்து காப்பாற்றுவினம் எனதுப் பார்த்தால் நீங்களே மாமாக்கு கருக்கு மட்டை பார்சல் அனுப்பப் போறிங்களே ...அனுப்புங்கோ அனுப்புங்கூ ...
நீங்கள் எனக்கை கருக்கு மட்டைதான் அனுப்புவினம் எண்டால் நான் அயித்தானுக்கு நிறைய காய்ந்த கருக்கு மட்டை மரத்தைஎ அனுப்பி வைத்து விடுவினம் ...பார்த்துக் கொள்ளுங்கோ ...

29 March 2012 02:16 
//இப்ப கனபேருக்கு கருக்கு மட்டை நூதனசாலையில் போய்க்காட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம் கலை!ம்ம்!

தனிமரம் said...

பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்////////////////////////////
பக்குவாமா சொன்னால் நான் திருந்தி விடுவேனாம் ...அவ்வவ் 
மாமா இன்னும் என்மேல எம்புட்டு நம்பிக்கை வைத்து இருக்கினம் ...

29 March 2012 02:17 
//மாமா மட்டுமா நாம் எல்லோரும் தான் கலை பட்டப்படிப்பு முடிக்கும் என்று நம்புகின்றோம்!

தனிமரம் said...

தனிமரம் said...
ரெவெரி அண்ணா இப்படி என்னை இக்கட்டில் மாட்டிவிட்டுப் போகலாமா?? அவ்வ்வ்வ்வ்வ்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!//////////////////


அவ்வவ் என்னது இக்கட்டா .

ரேவேர்ரி அண்ணா உங்களுக்கு ஒரு நாள் இருக்குதாக்கும் கச்சேரி ....

ரீரீ அண்ணா நான் உங்க மேல எம்புட்டு மரியாதையை வைத்து இருக்கினம் ,,,என்னைப் போல் தப்ப என்னிட்டிங்களோ
//ஐயையோ ரெவெரி அண்ணா எப்படி கீபோட்டில் உள்ள எழுத்துக்களை பின்னூட்டம் ஆகப்போடுகின்றார் என்பதை காட்டிக்கொடுத்த கலையிடம் நான் எப்படி பொய் சொல்லமுடியும் என்று தானே கேட்டிருந்தேன்! என் மேல் எல்லாம் மரியாதை வைக்கலாமா ??மரத்தை எத்தனை பேர் வெட்டக் காத்திருக்கின்றாங்களோ????

தனிமரம் said...

ஹேமா said...
ஓட்டுப்போட மறக்கினம்.ஏன்?!///////////////////////

ஏனென்டால் எனக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது வரவில்லை அதான் ..

29 March 2012 02:21 
//நாங்க சங்கரன் கோவில் தொகுதியைச் சொல்லவில்லை திரட்டிகள் ஓட்டைப்பற்றிச் சொன்னோம்!  :;)))

தனிமரம் said...

அய்யகூ மாமா நீங்கள் சோர்ந்து போயி இருக்கினம் ..கவலைப் பட்டால் ஒண்டுமே நடக்காது தானே மாமா ...கவலைப் படாதிங்கோ மாமா ...எல்லாம் சரி ஆகி விடும் ...மனசை குழப்பிட்டால் ஒரு வேலையும் நடக்காது ...கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு தெம்பா வேலைப் பாருங்கோ மாமா.////இத்தனை நாளும் "அவர்"(கடவுள்)மீது பாரத்தைப் போட்டுத்தான்,அவர் பாரம் தாங்க முடியாமல் முள்ளிவாய்க்காலில் "கை" விட்டு விட்டுப் போனாரோ?அவருக்குத்தான் வெளிச்சம்!இப்போது கொஞ்சம் கருணையுடன் செத்துத் தொலைந்தவர்கள்(மன்னிக்கவும்,அவ்வளவு வெறுமை,ஆதங்கம்,வெப்பிசாரம் எல்லாம்)))ஆவியின் வெப்பம் தாங்க முடியாமல் கண் திறந்து பார்ப்போம் என்று...............................!//ம்ம்ம்ம்

தனிமரம் said...

கலை said...

பக்குவமாகச் சொல்லி புரிய வைக்கலாம்,வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்////////////////////////////
பக்குவாமா சொன்னால் நான் திருந்தி விடுவேனாம் ...அவ்வவ்
மாமா இன்னும் என்மேல எம்புட்டு நம்பிக்கை வைத்து இருக்கினம்.///எனக்கு பெண்குழந்தைகள் மேல் அதீத நம்பிக்கை உண்டு!சிலவேளை வெளிநாடுகளில் அது பொய்த்துப்போக வாய்ப்பும் இருக்கலாம்!தாய் நாட்டில்,தமிழ் நாட்டில் கடைசிக் காலத்தில் கஞ்சியாவது ஊற்ற மாட்டார்களா,என்ன????
//யோகா ஐயா இப்படி ஒரு பக்கம் மட்டும் சொல்லக்கூடாது ஆண்களும் ஒழுங்கா பலர் இருக்கினம் தாய் தந்தையைப் பார்ப்போர்!

தனிமரம் said...

தனிமரம் said...

அயல் தேசம் போய் வந்ததால்யோகா ஐயா கொஞ்சம் அலர்ஜி போலும் மனதிற்கு அதுதான் ஹேமா அக்காள்!////ஒன்றுமில்லை,எல்லாம் "அந்த" நினைவு தான்!கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் அயலவர்,ஊரவரைப் பார்த்ததில் வந்த வினை.ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவூட்டிப் பார்க்கையில் ........................................................ஐயோ என்று குளறி அழவேண்டும்போல்.................வேண்டாம் விட்டுவிடலாம்.பார்க்கலாம் நேசன்.
//கலங்காதே மனமே என்று கவிஞர் கண்ணதாசன் பாடியிருக்கின்றார்!

தனிமரம் said...

அருமையாக இருக்கிறது மலையகத் தமிழ். ரூபவாஹினில ஒரு காலத்துல கேட்ருக்கேன். இப்போ நீங்க ஹேமா கதைக்கிறது செம ரகளையாக இருக்கு. அழகுத் தமிழ்தான் உங்க பாஷை. மகேந்திரனின் பாடலும் அருமை. பின்னூட்டங்கள் சுவையாக இருக்கின்றன.

29 March 2012 09:08 
// நன்றி துரைடெனியல் வலைச்சர ஆசிரியர் கடமைக்கு இடையிலும் என் பதிவுக்கு பின்னூட்டப் பதில் தந்ததற்கு .உண்மையில் மலையக மொழி தனித்துவம் ஆனது நண்பரே!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

யோகா அப்பா நான் சொல்லேல்ல.உங்கட மகள் கருவாச்சிதான் சொன்னவ உப்புமடச் சந்தியில நீங்கள் கருக்கு மட்டையோட காவல் இருக்கிறீங்களாம்.என்னைக் காப்பாத்த்ட்டாம்.என்ர கரங்காரையெல்லாம் மணிட்ட சொல்லியிருக்கிறா நாடு கடத்தட்டாம்.கருவாச்சி...கிர்ர்ர்ர் !

பாருங்கோ பதிவுக்கு ஓட்டுப்போடச் சொன்னா வயசுக்கு வரேல்லையாம்.குரு சொல்லித் தரேல்லையாம் இதெல்லாம்.முட்டை முட்டை கூழ் முட்டை.அங்க அரசன் கவிதை போட்டிருக்கிறார்.என்ன நக்கல் அங்க அந்தக் கவிதைக்கு.வந்திருக்கினம்.போயிருக்கினம் எண்டு.அப்பா...தாங்கேலாது.

ஹேமா said...

யோகா அப்பா அமைதியாயிருங்கோ.எல்லாருக்குமே விதம் விதமான கஸ்டங்கள்.என்ன செய்யலாம்.எல்லாமே அடிப்படைப் பிரச்சனை எங்கட நாட்டுப்பிரச்சனைதான்.விதிதான் !